அந்த 300 பேரை கூண்டில் ஏற்றினாலே உண்மை அம்பலமாகும்..தினகரன்-வீடியோ

  • 7 years ago
சென்னை: அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஈ.பி.எஸ் அணி-ஓ.பி.எஸ் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் போலியானவற்றை எளிதில் கண்டறிந்துவிட்டோம். அதன்படி பார்த்தால் அவர்கள் கூட்டிய பொதுக்குழுவே செல்லாது. எங்கள் தரப்பிடம் இரட்டை இலை வந்து சேரும் என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணியும் தினகரன் அணியும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் போலியான கையொப்பம் இருப்பதால், சாட்சியங்களை அழைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

AIADMK Dinakaran faction still confident over the two leaves symbol

Category

🗞
News

Recommended