பீரோவை உடைத்து நகை பணம் கொள்ளை- வீடியோ

  • 7 years ago
வீடுகளின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பறை பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவர் தனது உறவினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை காண்பதற்காக குடும்பத்தினருடன் சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தேனி மாவட்டத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் பால்ராஜ். இவரது மனைவி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தம்பதிகள் இருவரும் வெளியூர்களில் படிக்கும் தனது பிள்ளைகளை காண்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்ற போது மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dis : The robbery of the jewelry money in the bureau broke up the lock of houses

Recommended