கேரளாவில் பாகுபலி போல யானை ஏற முயன்ற நபர் - தூக்கி அடித்த யானை- வீடியோ

  • 7 years ago
பாகுபலி படத்தில் வருவது போல யானை மீது ஏற சென்ற பாகனை கோபத்தோடு தூக்கி அடித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள கரிமன்னூர் என்னும் இடத்தில் ஒருவர் தான் வளர்த்து வரும் யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்து கொண்டிருந்தார். அதை அவரது நண்பர் பேஸ்புக்கில் லைவ் செய்தார். அந்த லைவ் வீடியோவில் அடுத்து வந்த காட்சிகளைப் பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த இளைஞர் தன்னிடம் உள்ள கடைசி வாழைப்பழத்தை யானையிடம் கொடுப்பது போல் பாவனை காட்டிவிட்டு பாகுபலி படத்தில் வருவது போல தந்தங்களை பிடித்து தும்பிக்கையை மிதித்து யானை மீது ஏற முயற்சித்துள்ளார்.

The man was trying to pull a stunt similar to one performed by actor Prabhas in the blockbuster hit Baahubali.

Recommended