தினகரனை விட்டு தப்பி ஓடும் எம்.பி.க்கள்.. அடுத்தது எம்.எல்.ஏக்கள்?- வீடியோ

  • 7 years ago
அதிமுக கட்சி, கொடி, சின்னம் எதுவும் இல்லாத தினகரன் முகாமைவிட்டு எம்.பி.க்கள் அடுத்தடுத்து தாவ தொடங்கிவிட்டனர். இனி எம்.எல்.ஏக்களும் தாவுகிற படலம் அரங்கேறினால் ஒட்டுமொத்தமாக தினகரன் கூடாரமே காலியாகிவிடும் என்றே தெரிகிறது. சசிகலா சிறைக்குப் போன பின்னர் தினகரனுக்கு முதல்வர் ஆசை முளைத்தது. இதனால் ஆர்கே நகரில் போட்டியிட்டு பணத்தை வாரி இறைத்தார்.

ஆனால் தினகரன் திஹார் சிறைவாசத்தைத்தான் அனுபவிக்க நேர்ந்தது. அதன்பின்னர் சற்று அமைதியாக இருந்தார் தினகரன். அதற்குள் சசிகலா, தினகரன் என ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பத்தையே அதிமுக ஓரம்கட்டிவிட்டது
இதனால் விரக்தியடைந்த தினகரன் தரப்பு வேறுவழியே இல்லாமல் அதிமுக (அம்மா) கட்சியை தூசு தட்டியது. என்னதான் நடக்கும் பார்க்கலாம் என முட்டி மோதிப் பார்த்தது.. ஆனால் கடைசியாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு என அறிவித்துவிட்டது.

Aftre the MPS now Dinakaran Camp MLAs also will jump to EPS team, sources said.

Recommended