சோபன் பாபு- ஜெயலலிதாவுக்கு பிறந்த மகன்...வைரலாக சுற்றும் ஆவணம்- வீடியோ

  • 7 years ago
தனக்கு பிறந்த குழந்தையை வளர்க்க வசந்தாமணிக்கு ஜெயலலிதா பத்திரம் போட்டு கொடுத்தை போன்ற ஆவணங்கள் இப்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு பிறந்த மகன் நான் தான் என்று ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வந்தார். இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்களின் நகல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஈரோட்டைச் சேர்ந்த வசந்தா மணி என்ற பெண்ணிற்கு, ஜெயலலிதா தனக்கு பிறந்த ஆண் குழந்தையை தத்து கொடுத்தது போன்ற ஆவணங்கள் அதில் உள்ளன. ஒப்பந்தத்தின் மேலே கோமளவள்ளி என்ற ஜெயலலிதா என்று பெயர் இடம் பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆர். தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது, தனது சோபன் பாபுவிற்கு பிடிக்காததால், இருவரும் பிரிந்ததாக அந்த ஆவணங்களில் ஜெயலலிதா கூறியது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

A document going viral in internet claiming Jayalalitha allegedly written an agreement with her aid Vasantha Mani over his 'son'

Category

🗞
News

Recommended