• 6 years ago
ஜெயலலிதா இருந்தபோது இப்படித்தான் நடந்தது. அத்தனை பேர் அதிமுகவில் இருந்தாலும் கூட ஃபோகஸ் என்னவோ ஜெயலலிதா மீதுதான் இருக்கும். தற்போதைய சட்டசபையிலும் கூட அத்தனை பேர் இருந்தாலும் தினகரன் மீதுதான் அனைவரின் கவனமும் உள்ளது. இன்று பொதிகை டிவியில் ஆளுநர் உரை நேரலையின்போதும் கூட அடிக்கடி கேமரா தினகரன் பக்கமும் போய் வந்தது முக்கியமாக கவனிக்கதக்கதாக இருந்தது. முதல்வரை விட தினகரனை அதிக முறை காட்டியது போல உணர நேரிட்டது.

தினகரன் முக்கியமான, கவனிப்புக்குரிய ஒரு உறுப்பினராக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். காரணம், சூழல் அப்படி.
தனி ஒருவனாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார் தினகரன். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யபப்பட்டு விட்டனர். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே சட்டசபையில் தினகரன் தனித்துக் குரல் கொடுத்தாக வேண்டிய நிலை.

RK Nagar MLA TTV Dinakaran hogged the limelight in the Assembly as he has entered into the aseembly for the first time in his Politcal carrier.

Category

🗞
News

Recommended