• 6 years ago
விக்னேஷ் சிவன் தனது செருப்பை கொடுத்து தன்னை அடிக்குமாறு செந்திலிடம் கூறியதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. ரொம்ப நாள் கழித்து அவர் ரிலாக்ஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து சூர்யா கூறியதாவது,

விக்னேஷ் சிவன், அனிருத் கூட்டணி நிச்சயம் ஏதாவது ஸ்பெஷலாக இருக்கும் என்று கார்த்தி உள்பட என் குடும்பத்தார் கூறினார்கள். இருய்யா, இருய்யா கதையை கேட்டுவிட்டு நடிக்கிறேன் என்றேன்.

விக்னேஷ் சிவன் என்னை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். நான் ஒரு லோக்கலான கடைக்கு சென்று டீ குடித்து ரொம்ப நாளாகிவிட்டது. கொஞ்ச காலமாக நான் ரொம்ப சீரியஸான கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கிறேன்.

ஒரு ஸ்டேட்டை இன்னொரு ஸ்டேட்டிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறேன். ஒரு நாட்டை மற்றொரு நாட்டிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறேன். அப்படி எல்லாம் இல்லாமல் இந்த படத்தில் சிம்பிளாக நடித்துள்ளேன்.


Suriya said that after seeing Senthil's talent director Vignesh Shivan asked the ace comedian to hit him with his slippers. Thaana Serndha Koottam is hitting the screens tomorrow.

Category

🗞
News

Recommended