ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்துவை கொலை செய்யலாமா?

  • 6 years ago
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்துவை கொலை செய்யலாமா? என்று நெல்லையில் ஜீயர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தினசரி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த விழாவில் ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்நிலையில் ஜீயர்களும் அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில் ஜீயர்கள் நடத்திய போராட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் உங்களுக்கு ரூ.10 லட்சம் தருகிறேன். நாக்கின் மீது பல்லை போட்டுக் கொண்டு நமது இந்து தெய்வத்தை பற்றி யாராவது தவறாக பேசினால் அவரை கொலை செய்ய கூட நாம் தயாராக இருக்க வேண்டும்.

வைரமுத்து, வீரமணி போன்றவர்களை நாம் நாட்டை விட்டே துரத்த வேண்டும். மடிசார் கட்டியவர்களுக்கு சிறு பிரச்சினை என்று சொன்னால் நயினார் நாகேந்திரன் போன்ற தொண்டர்கள் நிச்சயமாக உருவெடுத்து வருவார்கள். மதுரையில் இந்தி எதிர்ப்பு மாநாடு, யாராவது அப்படி ஒரு மாநாட்டை நடத்திவிட்டு உயிரோடு திரும்ப முடியாது என்றார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இப்படிப்பட்ட உணர்வோடு நாமும் செயல்பட வேண்டும்.



Nainar Nagendran participated in Nellai protest against Vairamuthu's comment on Andal, asks to cut his tongue and even we have to ready to do murder those who speaks controversial about Hindu Dharma.

Category

🗞
News

Recommended