அறுபதுகளிலிருந்து எண்பதுகள் வரை இசையில் ஜானகி தான் அரசி..!!

  • 7 years ago
நம்மை மயக்கிய திரைப்பாடல்களில் ஆண்குரல் தரப்பில் பங்கேற்றவர்களுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தியாகராஜ பாகவதரிலிருந்து டி. எம். சௌந்தரராஜன் வழியாக ஜேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் என்று நீண்டு அருண்மொழி, ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் எனப் பெரிதாய்த் தொடர்கிறது. ஆனால், நம் நினைவைத் தாலாட்டுகிற திரைப்பாடல்களின் பெண்குரல்கள் இரண்டே இரண்டு பெரும்பிரிவுகளாக நிற்கின்றன. ஒன்று பி. சுசீலா. இன்னொன்று எஸ். ஜானகி. வாணி ஜெயராம், சித்ரா என்று நீட்ட முடியும் என்றாலும் சுசீலா அம்மையும் ஜானகியம்மையும் நம்மைப் பீடித்த பீடிப்பை வேறு தரத்தில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.

தமிழ்த் திரைப்பாடல்களின்படி ஒரேயொரு ஆண்குரலைச் சொல் என்றால் டி. எம். சௌந்தரராஜனையும் ஒரேயொரு பெண்குரலைச் சொல் என்றால் எஸ். ஜானகியையும் சொல்வேன். ஆண்குரலுக்குப் பாலசுப்பிரமணியத்தையோ பெண்குரலுக்குச் சுசீலாவையோ சொல்ல இயலாதா என்று கேட்பீர்கள். சொல்லலாம்தான். நான்கு வரிகளைக் கேட்டாலே என் நினைவுகளின் வறட்சியகன்று பழைமைக்குள் குடியேறும்படி மனத்தைக் கொள்ளையடித்த குரல் ஜானகியம்மாவுக்கே உரியது. சௌந்தரராஜனும் ஜானகியும் பாடிய இணைப்பாக்கள் அளவிற் குறைந்தவைதாம். அவை சிலவே என்றாலும் திரையிசையின் இணைப்பாடல் இலக்கணத்திற்கு முதற்சான்றுகளாய்க் கருதத்தக்கவை.


Poet Magudeswaran's article on the dominance and sweetness of playback singer S Janaki in Tamil cinema

Recommended