விஜயேந்திரரின் செயலை விட செல்லூர் ராஜூவின் பேச்சதுதான் ஷாக்- வீடியோ

  • 6 years ago
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ சப்பைக்கட்டு கட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி. அப்போது இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி மட்டும் அப்படியே உட்காந்திருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவரது கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டு வருகிறது. தமிழை அவமதித்த விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
விஜயேந்திரரால் தமிழகமே அல்லோகல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயேந்திரர் எந்த தவறும் செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தமிழக அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரே தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காததை ஆதரித்துப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு அமைச்சர் ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அளவில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Minster Selur Raju support Vijayendra saraswathi. He has said that Vijayendra saraswathi was meditating when tamil thaai vazhthu was tuned. Minister's this speech shocks people than Vijayendrar insults for tamil thaai vazhthu.

Category

🗞
News

Recommended