சுங்கச்சாவடிகளும் இனி டிஜிட்டல் மையம் ஆகின்றன- வீடியோ

  • 7 years ago
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் கட்டணங்கள் மாறுபடுகின்றன. சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது சுங்கச்சாவடிகளில் வரிசையாக நின்று கட்டணம் செலுத்துவது பெரும் பாடாகிறது.

நெடுஞ்சாலைகள் அமைத்து தரும் தனியார் நிறுவனங்கள், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த சுங்கச் சாவடியும் மூடப்படவில்லை.

Cash payment at toll plaza is being done away with. The government will introduce a toll system based on Pay as You Use module.

Recommended