ஶ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம்- வீடியோ

  • 6 years ago
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார். அவர் இறந்த செய்தி இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் அவருக்கு மணல் சிற்பம் வடித்துள்ளார் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக். தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.
எனது சிறுவயது நாயகிக்கு அஞ்சலி என்று கூறியுள்ள பட்நாயக், தனது சிற்பத்தில் 'RIP Sridevi' என்றும் 'we will miss you' என்றும் எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் ஶ்ரீதேவி. 'உங்கள் இழப்பால் வருந்துகிறோம்' என்று ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.