ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து எழும் பல்வேறு கேள்விகள்- வீடியோ

  • 6 years ago

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விளக்கம் அளித்திருந்தாலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.

இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதுதான் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய உண்மைகளும் தெரிய வரும்.

Here are Some unanswered questions reamin in Sridevi's Death.

Recommended