அய்யாக்கண்ணு மேல் நடவடிக்கை எடுங்கள் - தமிழிசை- வீடியோ

  • 6 years ago
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பாஜக பெண் நிர்வாகியை தரக்குறைவாக திட்டி தாக்கிய அய்யாக்கண்ணு மீது காவல்முறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் குமரியிலிருந்து சென்னை கோட்டை வரை நடைபயண விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில் வளாகத்தில் பக்தர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.


The Tamil Nadu BJP leader said that the police should take action against Ayyakannu who attacked the BJP woman in Tiruchendur temple premises.

Category

🗞
News

Recommended