• 6 years ago
ராஜ்யசபாவில் காலியாகும் 58 எம்பிகளில் 25 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. 6 மாநிலங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் தேர்தலில் எம்பிகளை எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். நாடு முழுவதும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 58 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிகிறது. இவர்களுக்கு பதிலாக எம்பிகளை தேர்வு செய்வதற்கான ராஜ்யசபா தேர்தல் இன்று நடக்கி றது. ராஜ்யசபா உறுப்பினர்களை எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.மொத்தமுள்ள 58 எம்பிகள் பதவியிடங்களில் 25 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது, ஏனெனில் எஞ்சிய 33 பேர் 10 மாநிலங்களில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The polling for RS elections in Uttar Pradesh, West Bengal, Karnataka, Jharkhand, Chattisgarh and Telangana. The voting starts and will continue till 4 pm.

Category

🗞
News

Recommended