திருச்சி முதல் ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம்

  • 6 years ago
திமுக சார்பில் திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி ஸ்டாலின் திருச்சியில் பயணத்தை தொடங்குகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திருச்சி முக்கொம்பிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.



DMK Working president MK Stalin to launch Cauvery Urimai meetpu payanam from trichy Mukkombu on april 7.

Recommended