ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 5 எம்.பிக்கள் ராஜினாமா..

  • 6 years ago
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில் ஏறத்தாழ 21 நாட்களாக ஆந்திரா, தமிழக எம்.பிகளின் அமளியால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கின. விவாதங்கள் எதுவும் நடத்தப்படாமல் நிதி மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன.


Jahanmohan Reddy's YSR Congress party MPs decides to give their resignation letter to Speaker Sumithra Mahajan for centre not implementing the special staus to AndhraPradesh.

Recommended