கூடா நட்பு..கேடாய் முடியும்- வீடியோ

  • 6 years ago
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து பிணத்தை கிணற்றில் தள்ளி விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் முத்துமாரி இவருக்கு கவிதா னெ்ற மனைவியும் .ஜெயகார் திகா ,ஷன்முக பிரியா மகள்கள் உள்ளனர் , முத்துமாரிஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் மீது அவனியாபுரம், கீரைத் துறை காவல் நிலையங்களில பல்வேறு வழக்குகள் உள்ளது.இன்று காலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்று வந்த முத்துமாரியை மதியம் 2 மணியளவில் அவரது நண்பர்களான ஈஸ்வரன் , நொண்டி மணி, மற்றும் செல்வா ஆகியோர் அழைத்து சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர்முத்துமாரியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பிணத்தை கிணற்றில் தள்ளி விட்டனார். அருகி்லிருந்தவர்கள் அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் கிணத்றில் இறங்கி பிணத்தை மீட்டனர் , அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துமாரி உடலை மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஒடிய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Recommended