கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் காதலனை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குளித்தலையில் லோகநாதன்என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி நளினி. இவருக்கும் லோகநாதனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம்ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த விவரம் முருகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும்கள்ளக்காதலர்கள் தங்கள் தொடர்பை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லோகநாதனும், நளினியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் லோகநாதனின்செல்போனில் தொடர்பு கொண்ட நளினியின் கணவர் முருகன் எனது மனைவியை நீயே திருமணம் செய்துகொள். உங்களுக்கு நானே முன்னின்று திருமணம் செய்து வைக்கிறேன். நீயும், நளினியும்வேப்பங்காட்டில் உள்ள காட்டுப்பகுதிக்கு வாருங்கள்“ என்று அழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் வேப்பங்காட்டில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த முருகன் மற்றும்பெருமாள் ஆகியோர் தாங்கள் தயாராக வைத்திருந்த அரிவாளைக்கொண்டு லோகநாதனை வெட்ட முயன்றனர். இதனால் பயந்து அலறித்துடித்த லோகநாதன், அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்கஓடினார். ஆனாலும் லோகநாதனை நளினியின் கண் முன்னே ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் நளினியை அழைத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றதுபோலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொலையாளிகளான நளினியின் கணவர் முருகனையும், அவருடைய சகோதரர் பெருமாளையும் தேடி வந்தனர். திருப்பூர் -தாராபுரம் சாலை கோவில்வழி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவரை காவல்துறையினர் விசாரித்த பொழுது, அவர்கள்லோகநானை கொலை செய்த முருகன் மற்றும் பெருமாள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மத்திய காவல்துறையினர் அவர்கள் பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் கள்ளக் காதலி கண்முன்னே வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அடுத்தநாளே கைது செய்யப்பட்டது அப்பகுதிபொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
குளித்தலையில் லோகநாதன்என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி நளினி. இவருக்கும் லோகநாதனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம்ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த விவரம் முருகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும்கள்ளக்காதலர்கள் தங்கள் தொடர்பை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லோகநாதனும், நளினியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் லோகநாதனின்செல்போனில் தொடர்பு கொண்ட நளினியின் கணவர் முருகன் எனது மனைவியை நீயே திருமணம் செய்துகொள். உங்களுக்கு நானே முன்னின்று திருமணம் செய்து வைக்கிறேன். நீயும், நளினியும்வேப்பங்காட்டில் உள்ள காட்டுப்பகுதிக்கு வாருங்கள்“ என்று அழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் வேப்பங்காட்டில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த முருகன் மற்றும்பெருமாள் ஆகியோர் தாங்கள் தயாராக வைத்திருந்த அரிவாளைக்கொண்டு லோகநாதனை வெட்ட முயன்றனர். இதனால் பயந்து அலறித்துடித்த லோகநாதன், அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்கஓடினார். ஆனாலும் லோகநாதனை நளினியின் கண் முன்னே ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் நளினியை அழைத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றதுபோலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொலையாளிகளான நளினியின் கணவர் முருகனையும், அவருடைய சகோதரர் பெருமாளையும் தேடி வந்தனர். திருப்பூர் -தாராபுரம் சாலை கோவில்வழி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவரை காவல்துறையினர் விசாரித்த பொழுது, அவர்கள்லோகநானை கொலை செய்த முருகன் மற்றும் பெருமாள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த மத்திய காவல்துறையினர் அவர்கள் பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் கள்ளக் காதலி கண்முன்னே வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அடுத்தநாளே கைது செய்யப்பட்டது அப்பகுதிபொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
Category
🗞
News