• 6 years ago
கர்நாடகத்தில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் கன்னடர்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் சில அரசியல்வியாதிகள்தான் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு ஐடியா வெளிகாட்டிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.அதில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு பொதுமக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்றும் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Kannadigas are not opposing to give water for Tamilnadu. Its purely politics. This reveals from Simbu's idea.#UniteForHumanity

Category

🗞
News

Recommended