காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை கைது செய்து சிறையில் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானது அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியான ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டி போராடியவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் .
Category
🗞
News