மாங்கல்ய தோஷத்திற்காக செய்த மரண வேள்வி நடத்திய புராரி குடும்பம்- வீடியோ

  • 6 years ago
புராரி வழக்கில் இறந்த பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தடையானது. இதை கழிப்பதற்காக புராரி குடும்பம் மரண வேள்வி நடத்தியதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் புராரியில் ஒரு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போலீஸார் தவிக்கின்றனர்.