பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை

  • 6 years ago
புதுச்சேரியில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலாப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேக்கிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் கூனிமேட்டைச் சேர்ந்த சுமன் என்பதும், கனகசெட்டிக்குளம் மற்றும் காலாப்பட்டில் 3 வீடுகளில் 37 சவரன் நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுமனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 34 சவரன் நகைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV