ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி! வைகோ குற்றச்சாட்டு

  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென்று ஆலை நிர்வாகம் எல்லா வகையிலும் முயற்சி செய்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்

பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென்று ஆலை நிர்வாகம் எல்லா வகையிலும் முயற்சி செய்கிறது என்றும் ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன் எனவும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் இவ்விஷயத்தில் வேற்று மாநில நீதிபதிகளை கொண்டு விசாரிப்பது என்பது முறையல்ல எனவும் வைகோ தெரிவித்தார்

The MDG General Secretary Vaiko has accused the plant management of all efforts to open the Sterlite plant.

Recommended