ஆமை வேகத்தில் பணி! ரயிலை மறித்து போராட்டம்

  • 6 years ago
ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதை திமுகவினர் ரயில்மறியலில் ஈடுபட்டனர்

வேலூர்மாவட்டம்,தொரப்பாடி அருகே விழுப்புரம் வேலூர் இடையேயான ரயில் பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது இதனால் அரியூர் ஊசூர் தங்ககோவில் செல்வோர் என பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர் இதுகுறித்து ரயில்வேதுறைக்கும் மாநில அரசுக்கும் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது இதே போன்று இதே பாதையில் வேலூர் நகரில் கஸ்பா பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கி அதுவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது இதனால் நகர்புற பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே இரண்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி அனைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் திமுகவினர் தொரப்பாடி ரயில்வே மேம்பால பணி நடைபெறும் இடத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர் இதில் திரளான திமுகவினர் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்

The DMK was involved in the transit of railway surgeon operations at the turtle speed

Recommended