குமரி வளர்ச்சி அடையாது.. ஆவேசத்தில் பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

  • 5 years ago
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டத்தில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் கிளையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும் போது.குமரியில் தற்போது நிறைவேற்றி வரும் திட்டங்கள் அனைத்தும் 1999 ம் ஆண்டு வாக்குறுதி கொடுத்தவை என்றும் அதன் பிறகு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு திட்டத்தை செயல்படுத்த வில்லை. பின்னர் தற்போது பாஜக ஆட்சியில் தான் மீண்டும் மேம்பாலம் .சாலை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.மேலும் குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்திற்கும் அப்போதே ஆய்வு மேற்கொள்ளப்பட்டன ஆனால் 2001 ல் கலைஞர் ஆட்சியில் மக்களுக்கு தெரியும் இந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அடுத்த ஆட்சியில் இல்லமா போக செய்வார்கள் .அடுத்த ஆட்சியில் கொண்டு வரும் திட்டங்களை அதற்கு அடுத்து வரும் ஆட்சியில் இல்லம போக செய்வார்கள் அவ்வாறு குளச்சல் துறைமுக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு தான் அந்த திட்டத்திற்கு அனுமதி வாங்கி ஆய்வு மேற்கொண்டோம்.ஆனால் குளச்சலில் அமைந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகள் இடியும் ஆனால் தான் பாதிப்பு இல்லாமல் மாற்று இடத்தை தேர்வு செய்தோம் அதற்கும் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இவ்வாறு எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தால் குமரி மாவட்டம் வளர்ச்சி அடையாது என அவர் பேசினார்.

Des:
Kumari does not grow