‘சைக்கிளில் வரும் டாக்டர்; காரில் வரும் பேஷண்ட்' என்றுதான் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியை அழைப்பார்கள். எந்தக் கட்டணமும் பெறாமல் கடந்த 30 ஆண்டுகளாக கிராமப்புற மருத்துவ சேவையை மேற்கொண்டு வருகிறார். கல்பாக்கம் அணுஉலையில் தொடங்கி மருத்துவ உலகின் அனைத்து மோசடிகளையும் வெளி உலகின் பார்வைக்கு முன்வைப்பவர். இன்று காலை வழக்கம்போல தன்னுடைய கிளினிக்குக்கு வந்தவருக்கு பேரதிர்ச்சி.