ஆழ்கடலுக்குள் இருந்தும் ஒரு சொட்டுதண்ணீர் கூட கேமராவின் உள்ளே இல்லை !!

  • 4 years ago
'கடலில் மிதந்துவந்த கண்ணாடி பாட்டிலில் இருந்து பல வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது' என்பது போன்ற செய்திகளைப் பலர் கேட்டிருக்கக்கூடும், திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடும். அடைக்கப்பட்ட அந்த பாட்டிலின் உள்ளேயிருக்கும் அந்தக் காகிதத்தில் யாரோ ஒருவர் எழுதிய ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கும். கடலில் பயணம் செய்பவர்கள் தங்களிடம் இருக்கும் காலியான பாட்டில்களில் இது போல செய்தியை வைத்து கடலில் எறிந்து விடுவார்கள்,சில சமயங்களில் கடலுக்கு வெளியே இருப்பவர்களும் இது போல ஒன்றைத் தயார் செய்து கடலில் எறிவதுண்டு. அந்த பாட்டில் என்றோ ஒருநாள் யாரோ ஒருவரின் கைகளுக்கு செல்லலாம் என்பதுதான் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயம். அந்தக் காகிதத்தில் பெரும்பாலும் எழுதியவரின் பெயர், அதைக் கண்டெடுப்பவருக்கு அவர் கூறும் செய்தி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.









lost camera in sea find after two years

Recommended