பாழடைந்த பங்களா...தீப்பிடித்த கட்டில்...அந்த 18 நாட்கள்!
- 4 years ago
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கொல்கத்தா சி.ஐ.டி அலுவலகத்துக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், ‘கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் வசிக்கும் மைத்ரேய பட்டாசார்யா என்பவர், இறந்த தன் தாயை 18 நாள்களாக வீட்டில் வைத்துள்ளார். தற்போது தாயின் உடலைப் புதைக்க என்னை உதவிக்கு அழைக்கிறார். அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.