காற்றில் கலக்கும் நச்சுப்பொருள் இதுதானா ? | Alert

  • 4 years ago
காற்று மாசுபாடு, உலகம் முழுவதும் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு வருடத்துக்கு 7 மில்லியனுக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டின் காரணமாக இறக்கிறார்கள் என்று உலகச் சுகாதார மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. நகரமயமாதல், அதிகரிக்கும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, குறையும் மரங்களின் எண்ணிக்கை என வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஏராளம். இந்நிலையில் இந்தியாவின் காற்று நிலையைப் பற்றிய ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.





satellite captures formaldehyde level increase in indian air surface

Recommended