Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
MEENAKSHI INSTITUTE OF CATERING & HOTEL MANAGEMENT, VALASARAVAKKAM, CHENNAI - https://mgrihmct.edu.in/
Reporter - கு.ஆனந்தராஜ்
Camera - சொ.பாலசுப்ரமணியன்
சுரங்கத் தொழில்கள் மிகவும் சவாலும் ஆபத்தும் நிறைந் தவை. எனவே, அவற்றில் பெண்கள் நுழையக்கூட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், சுண்ணாம்புக் கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களிலும், அவற்றைக் கொண்டு சிமென்ட் தயாரிக்கும் ஆலைகளிலும் 13 ஆண்டுகள் துணிச்சலாக வேலை செய்திருக்கிறார் மணிமேகலை. சித்தாள் வேலை முதல் கறி வெட்டுவதுவரை இவர் பார்க்காத வேலைகள் இல்லை. தற்போது இயற்கை விவசாயி. சென்னையை அடுத்த கண்டிகையிலுள்ள தோட்டத்தில் பந்தல் காய்கறிகளை அறுவடை செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
“ப்ளஸ் டூ முடிச்சதுமே உன்னி கிருஷ்ணனோடு காதல் திருமணம். என் வீட்டில் ஏத்துகிட்டாலும், கணவர் வீட்டில் கடைசி வரை ஏத்துக்கலை. நானும் கணவரும் வசதியான குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், பிறர் தயவில்லாம சுயமா முன்னேற முடிவெடுத்தோம். கணவர் தனியார் நிறுவன ஊழியர். கரஸ்ல பி.காம் முடிச்சிட்டு, தனியார் நிறுவன வேலைக்குப் போனேன். ஓய்வு நேரத்திலும் விடுமுறை தினத்திலும் டியூஷன் எடுக்கறது, இறைச்சி வெட்டுறது, டைப்பிங், அக்கவுன்ட்ஸ் எழுதுறது, டெய்லரிங், சித்தாள் வேலை உட்பட பலதையும் கூச்சம் பார்க்காம செஞ்சேன். அப்பல்லாம் வெறும் கஞ்சி மட்டுமே எங்களுக்கு மூணு வேளை சாப்பாடு.

Category

🗞
News

Recommended