#MRVNEWS #தொண்டன் மீது கைவைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.வி அதிரடி |

  • 3 years ago
#MRVNEWS #மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசினை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் ஆங்காங்கே திமுக அரசினை கண்டித்து அதிமுக வினர் கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் பேருந்து நிலையம் அருகே, கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர், தமிழக முதல்வராக தற்போது இருக்கும் மு.க.ஸ்டாலின், அப்போது ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் போது, குளித்தலையில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போது அதிமுக வில் அங்கம் வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜியை, ஊழல்வாதி என்றெல்லாம் பேசி விட்டு, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரை நிலத்தினை அபகரிக்க திட்டம் தீட்டியதாகவும் கூறி கடுமையாக விமர்சனம் செய்தவர், தற்போது அவருக்கே அமைச்சர் பதவி கொடுத்திருப்பது ஒருவேளை அவர் காந்தியாக மாறிவிட்டாரா ? என்றும், மேலும், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குசேகரிக்கும் போது 11 மணிக்கு மு.க.ஸ்டாலின், முதல்வராக அரியணையில் ஏறுவார், 11.05 மணிக்கு ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளலாம், எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார், தடுக்கும் அதிகாரி இருக்க மாட்டார் என்றெல்லாம் பொய் கூறி ஆட்சியில் அமர்ந்து விட்டு தற்போது மாட்டுவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது,. வெறும் பொய் வாக்குறுதி மட்டுமே, என்றும், ஏன் திமுக வினரின் கடிகாரத்தில் 11.05 ஆகவில்லையா ? என்றும் வினா எழுப்பினார். இதுமட்டுமில்லாமல், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காக்கி உடைந்த திமுக மாவட்ட செயலாளர் என்றும், டி.எஸ்.பி திமுக வின் நகர செயலாளர் என்றும் விமர்சனம் செய்ததோடு, குட்கா, கஞ்சா ஆகியவை வைத்து பொய் வழக்கு பதிவு செய்து அதிமுக விலிருந்து திமுக விற்கு மாற கேன்வாஸ் செய்கின்றனர் என்றார். அதிமுக வினரின் நரம்புகளை எடுப்போம் என்று வீர வசனம் பேசி அமைச்சராகவும், திமுக வின் மாவட்ட செயலாளராக உள்ள செந்தில்பாலாஜி, தயவால், 24 மணி நேரமும் கரூரில் சந்துக்கடைகள் மூலம் மதுக்கடைகள் விற்பனை, ஒப்பந்ததாரர்களிடம் 10 சதவிகிதம் கமிஷன், அதிமுக விலிருந்து திமுக விற்கு வரவில்லை என்றால் வீட்டில் உள்ள மற்ற அரசு வேலையில் உள்ள ஆட்களை இடமாறுதல் செய்தல் என்று பல்வேறு வேலைகளை செந்தில்பாலாஜி, செய்து வருவதாகவும், வைச்ச மொய்ய திருப்பி வைப்பது தமிழனின் பண்பாடு, ஆனால், வைச்ச மொய்க்கு அதிக மொய் வைப்போம் என்றும் சூளுரை ஆற்றினார். இதோடு மட்டுமில்லாமல், எங்கள் அதிமுக வின் தொண்டர்கள் மீது கை வைத்தால் நான் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன், கையை உடைப்பேன் என்றும் கூறியதோடு, எங்களது வழக்கறிஞர் அணியினர் எந்த பொய் வழக்கு போட்டாலும், எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க நாங்கள் தயார். அதுமட்டுமில்லாமல், அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்தது, அதை விட்டு தற்போது கலைஞர் உணவகம் என்று மாற்றுவது யாருடைய திட்டத்திற்கு யார் பெயர் வைப்பது என்றும் விமர்சனம் வைத்தார்.

Recommended