• 2 years ago
#karurboomi #newsonly #boominews #பேப்பர், அச்சு மை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக கரூர் ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

கரூர் மாவட்டத்தில் 200க்கும் அதிகமான ஆப்செட் பிரிண்டர்ஸ் நிறுவனங்கள் அமைந்துள்ளது. தொழில் மாநகரமான கரூரில் ஆப்செட் பிரிண்டர்ஸ் நிறுவனங்கள் ஜவுளி மற்றும் கொசுவலை உள்ளிட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பில் புக், லேபிள், டேக், லெட்டர் கார்டு, அட்டை பாக்ஸ் உள்ளிட்ட பிரிண்டிங் சம்பந்தமான பிரதான வேலைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மேலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பத்திரிக்கைகள் அரசியல் கட்சிகளுக்கான போஸ்டர் நோட்டீஸ் போன்ற வேலைகள் செய்யப்படுகின்றன.
கரூர் மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் பிரஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டது. கடந்த ஒரு மாதத்தில் அச்சகங்களுக்கு தேவையான பேப்பர், அச்சு மை, பசை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரிண்டிங் பிரஸ் நிறுவன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், விலையேற்றம் காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான பிரிண்டிங் வேலைகள் செய்து கொடுப்பது பெரும் சிக்கலை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தேதி குறிப்பிடாமல் நடத்தப்பட உள்ளதாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

பேட்டி:கணேஷ்குமார், பொருளாளர் (கரூர் மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்)

Category

🗞
News

Recommended