எல்லையைக் காத்து நிற்கும் | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | APJ Abdul Kalam

  • last month
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Poetry of "Barath Ratna" APJ Abdul Kalam
Composed and Performed by Sirkali G. Siva Chidambaram

எல்லையைக் காத்து நிற்கும் என் அருமை வீரர்காள்!
இந்தியத் திருநாட்டின் ஈடில்லா மைந்தர்காள்!

இரவிலே கண் அயர்ந்து எல்லோரும் துயின்றாலும்,
துஞ்சாது, துயிலாது கடமையே கண்ணாய் நீ !
இலைச்சருகும், புழுதி யும் எடுத்து வரும் காற்றென்ன!
பஞ்சு பஞ்சாய் பறந்து வந்து பனி மூடும் நிலவென்ன,
தோளெல்லாம் துளிர்த்து நிற்க
சுட்டெரிக்கும் சுடும் வெப்பம்
எல்லாமே கடந்து விட்ட
இணையற்ற யோகி யைப்போல்!
தன்னந் தனியனாய்
தளராது விழிப்புடனே மலையுச்சி யாகட்டும்,
மடு போன்ற பள்ளத்திலும்,
கானல் நீர் பெருகிவரும்
கடும் துயரப் பாலையிலும்,
அலைபாயும் கடலென்ன
புகை சேரும் ஒரு பொருட்டல்ல !
இந்தியத் தாய் எல்லை தனை
விண்வெளியிலும் காத்து நின்றாய்!
இதற்கென்றே உம்முடைய
இளமையையும் அற்பனித்தாய்!
பரதமெனும் பூஞ்சோலையில்
தென்றல் எல்லாம் நின் புகழ்பாடும்.
என்னுடைய இதயங்கள்
உன் பெரு வாழ்விற்கு பிராத்திக்கும்.

Category

🎵
Music

Recommended