மூக்குப்பொடி சித்தர் ஆசி... யாருக்கு கிடைச்சிருக்கு பாருங்க!- வீடியோ

  • 7 years ago
நாட்டு நடப்புகளை முன்கூட்டியே சொல்லியதால் பிரபலமடைந்த மூக்குப்பொடி சித்தரின் ஆசியை பெறுவதற்காக 2 முறை டிடிவி. தினகரன் அவரை நேரில் சந்தித்தார். ஆனால் இரண்டு முறையுமே அவருக்கு மூக்குப்பொடி சித்தர் ஆசி வழங்கவில்லை இந்நிலையில் சித்தர் திருவண்ணாமலையில் உள்ள கடைக்குள் திடீரென சென்றது பக்தர்களை குஷிப்படுத்தியுள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள். இவர் தற்போது திருவண்ணாமலையில் உணவகம் ஒன்றில் மாடியில் உள்ள தளத்தில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

சசிகலா சிறை சென்ற பின்னர் தங்களின் நிலைமை மோசமாகி வருவதால் மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெறுவதற்காக இரண்டு முறை தினகரன் அவரை சந்தித்துள்ளார். ஆனால் இரண்டு முறையுமே தினகரனுக்கு அவர் ஆசி வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Mukkupodi Siddhar who is at Thiruvannamali unexpectedly enter into tea shop and surprised the devotees, as people has more belief with him.

Category

🗞
News

Recommended