7 தமிழரை விடுதலை செய்ய கருணையுடன் உதவுங்கள்- முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம்- வீடியோ

  • 7 years ago
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தாமஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பெஞ்சில் இருந்தவர் நீதிபதி தாமஸ். ஆனால் அண்மைக்காலமாக பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக முன்னாள் நீதிபதி தாமஸ் கருத்து தெரிவித்து வருகிறார்.

The judge who headed the three-member Supreme Court bench that confirmed the punishment to the convicts in the Rajiv Gandhi assassination case has written a letter to the former prime minister’s wife and Congress president Sonia Gandhi, requesting her to convey her willingness for the remission of sentences of Rajiv Gandhi convicts

Recommended