பெங்களூரில் கல்லூரி மாணவியை 10 நாட்களாக பலாத்காரம் செய்த 4 பேர்- வீடியோ

  • 7 years ago
மூன்று வாரங்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த இளம்வயது பெண் ஒருவர் கல்லூரியில் இருந்து திரும்பி வரும் வழியில் காணமல் போனார். இந்த பெண்ணை இரண்டு வாரமாக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் அங்கிருந்த ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்ப்பட்டு இருக்கிறது. மேலும் பத்து நாட்களாக அவர் மிகவும் மோசமான வகையில் கொடுமை படுத்தப்பட்டு இருக்கிறார். தற்போது போலீசார் இந்த செயலை செய்த நபர்களை கைது செய்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் கடந்த ஒருமாதமாக மோசமாக திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது. இவர்பெங்களூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, கல்லூரிக்கு சென்ற பிறகு மாலை வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே மறுநாள் காலை அந்த பெண்ணின் தந்தை போலீசுக்கு புகார் அளித்து இருக்கிறார். ஆனால் பெண் காணாமல் போய் இரண்டு வாரமாகியும் போலீசுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் பணம் கேட்டும் யாரும் கால் செய்யவில்லை.

A teenage girl was allegedly kidnapped and raped ten days in Bengaluru. Police arrested four men in this case under the Protection of Children from Sexual Offences.