போலீசின் அராஜகத்தால் பறிக்கப்படும் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள்- வீடியோ

  • 6 years ago

காவல்துறையினரின் தொடர் அத்துமீறலால் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பரிதாபமாக பறிபோவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது. வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டு போக்குவரத்து போலீசார் பெரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். அதிகார திமிரால் எந்த உச்சத்துக்கும் செல்லலாம் என்ற போலீசாரின் நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பறித்து வருகிறது.

Category

🗞
News

Recommended