என்னைப் பற்றி விட்டுத்தள்ளுங்கள்-சிம்பு கெத்து- வீடியோ

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் கருத்து கூறிய எனக்கு எதிராக ஏதாவது நேர்ந்தால் அதை பார்க்கும் தமிழர்கள், கன்னடர்கள் என இந்திய மக்கள் அனைவரும் என் முன்னால் நிற்பர் என்று சிம்பு தெரிவித்தார். காவிரி நீர் கொடுப்பது குறித்த சிம்புவின் பேச்சு கர்நாடக மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை ஏற்று மக்கள் தண்ணீர் தர தயார் என்று கூறிய வீடியோக்களை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிம்பு கர்நாடக டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் ரஜினி, கமல் அரசியல் குறித்து கேட்கிறீர்கள். யாரும் யாரையும் எதிர்க்கக் கூடாது. அவர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து சில கருத்துகளை நல்ல விதமாக கூறினாலும் அவர்களுக்கு கெட்ட பெயரை கொடுக்கிறது. அரசியல் ரீதியான விளையாட்டுகளால் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மற்றபடி அவர்களை ஆதரிக்க யாருக்கும் பிரச்சினை இல்லை. அரசியல் ரிதீயிலான விளையாட்டுகளையும் சமூகத்தையும் புரிந்து கொண்டால் போதும்.


Actor Simbu says that i dont care about wrong doings happens for me because of talking about Cauvery issue.

Category

🗞
News

Recommended