தினகரன் குஷி... அதிமுகவினர் ஆவேசம்...

  • 6 years ago
ஆர் கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தினரகன் தரப்பினர் குஷியடைந்துள்ளனர். அதிமுகவினர் ஆவேசமடைந்துள்ளனர்.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்கே நகர் தொகுதி காலியாக இருந்தது. ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுடன் தேர்தலையும் நடத்தியது. தேர்தலில் அதிமுக திமுக பாஜக என்று முக்கிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களுக்கு நடுவில் டிடிவி தினகரன் சுயேட்டிசையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலைவயில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என்று நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் தினகரன் தரப்பினர் படு குஷியடைந்துள்ளனர். அடுத்தபடியாக வரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாகவே வரும் என்றும் தெரிவித்தனர். நீதிமன்ற தீர்பினால் அதிமுகவினர் ஆவேசமடைந்துள்ளனர்.

Dinakaran's party has been keen on the Supreme Court's order that DVV Dinakaran will be successful in the RK Nagar constituency. The AIADMK has been furious.

Recommended