பள்ளியின் தலைமை ஆசிரியர் தாக்கியதில் கையில் முறிவு ஏற்பட்ட மாணவன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

  • 6 years ago
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தில் அரசினர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் ஜீவரத்தினத்தை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி தலைமை ஆசிரியர் கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவரத்தினத்தின் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.