பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருக்கு கடத்திய 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்- வீடியோ

  • 5 years ago
வேலூர்மாவட்டம்,ஆம்பூர் ரயில்நிலையத்தில் சென்னையிலிருந்து -பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூருக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ரயிலின் அமர்வு இருக்கைகளுக்கு அடியில் வைத்து சிலர் கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து ஆம்பூர் ரயில்நிலையத்தில் நின்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது 350 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர் இதனை ஆம்பூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகள் வைத்தனர் மேலும் அரிசியை கடத்தியவர்கள் யார் எனவும் வழக்குபதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரயில் மூலம் கடத்தப்படும் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

350 kg rice seized in vellore.

Recommended