#BOOMINEWS | விடுமுறை தினத்தில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் ரூம்கள் இல்லாமல் அவதி |

  • 3 years ago
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வாரத்தின் இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் . மேலும் நே xxற்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் ஏற்காட்டில் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் , ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் ஏற்காட்டில் தினம் தோறும் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர் . மற்றும் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குளிருடன் கூடிய இதமான சூழல் நிலவுவதால் நேற்று சுற்றிபார்த்துவிட்டு இரவு இங்கேயே தங்கிவிட்டு இன்றும் சுற்றி பார்க்க விரும்புகின்றனர் , சிலர் இங்கு உள்ள தங்கும் விடுதிகளில் தங்கிவிட்டனர் .மேலும் இங்கு உள்ள தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பிவிட்டதால் பல சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ரூம்கள் கிடைக்காமல் நேற்று இரவு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நேற்று திடீரென மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறு சுற்றி பார்த்தனர் .சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரவால் இங்குள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் ,பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Recommended