65 வருட கால அனுபவங்களை கூறிய ராணி எலிசபெத்- வீடியோ

  • 6 years ago
இங்கிலாந்து ராணியாக தான் முடிசூட்டி கொண்ட அனுபவங்களை 65 ஆண்டுகளுக்கு பிறகு, ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு ராணி எலிசபெத் பேட்டி அளித்துள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத்-2 கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகியவற்றின் ராணியாக உள்ளார். வயது அடிப்படையில் தற்போது ஆட்சி புரிந்து வருபவர்களில் இவரே அதிக வயதானவர். இவருக்கு 92 வயதாகிறது. எலிசபெத் ராணிக்கு தான் முடிசூடிக் கொண்டது குறித்து 65 ஆண்டுகள் கழித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

ராணி எலிசபெத் முடிசூடி 65 ஆண்டுகள் நினைவையொட்டி ஆங்கில தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் நான் ராணியாக 27 வயதில் நியமிக்கப்பட்டேன். அதாவது கடந்த 1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிசூடிக் கொண்டேன்.
வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் பயணம் செய்தது அசௌகரியமாகவும், பயங்கரமாகவும் இருந்தது. தலையில் எந்நேரமும் கிரீடத்தை அணிந்து கொண்டிருப்பது சிரமமாக இருந்தது. மற்றபடி எல்லாம் நன்றாக இருந்தது

England’s Queen Elizabeth finally opened up about her coronation day 65 years ago and revealed that she had a surprisingly uncomfortable ride.

Category

🗞
News

Recommended