எஸ்.வி.சேகர் மட்டமான கருத்து.. கொதிக்கும் அதிமுக- வீடியோ

  • 6 years ago
ஜெயேந்திரரை கைது செய்ததன் காரணமாக ஜெயலலிதாவின் சாவு விடை தெரியாத மர்மமாகியுள்ளது என்ற அர்த்தத்தில் பேட்டியளித்துள்ளார் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக கட்சியை சேர்ந்தவரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர். டிவி சேனல் நேர்காணல் ஒன்றில் எஸ்.வி.சேகர் அளித்த இந்த பேட்டி அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிகழ்ச்சியொன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்த கேள்விகள் நேர்காணலில் எழுப்பப்பட்டன. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதை போல சட்டத்தால் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால் விஜயேந்திரர் செயல் தவறில்லை என்றார். குருநிந்தனை என்பது பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது என்றார் எஸ்.வி.சேகர்.
2004ல் காஞ்சி மடாதிபதி, ஜெயேந்திரரை, ஜெயலலிதா அரசு கைது செய்தது. ஆனால் ஜெயேந்திரரை குருவாக மதிக்கும் நீங்கள், 2006ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனீர்களே என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, "என்ன விஷயம் என்று ஜெயலலிதாவுக்கு சொல்வதற்காக, ஒருவர் கட்சிக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று சேகர் மழுப்பலான பதில் அளித்தார்.

Jayalalithaa's death become an mystery, says former MLA, and film actor SV.Shekhar, this is due to her action against Kanchi Jayendrar, he added.

Category

🗞
News

Recommended