சட்டசபை சம்பவத்திற்கு பிறகு மோசமாக கையாளப்பட்ட ஸ்டாலின்

  • 6 years ago
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.

இதனால் சட்டசபையில் பெரும் களேபரம் வெடித்தது. தம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது தாம் தாக்கப்பட்டதாகவும் தம்முடைய சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

After the Assembly incident once again MK Stalin arrested for agittaion.

Recommended