குடும்ப தகராறில், விவசாயியை உறவினர்களே வெட்டிக்கொலை

  • 6 years ago
நெல்லை மாவட்டம் மூலகருப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலைநம்பி. இவரது உறவினர்கள் செம்புகுட்டி மற்றும் சுயம்பு ஆகியோர் குமரி மாவட்டம் லஷ்மிபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணத்திற்கு பெண் கேட்டதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில், நேற்று இரவு, அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையின் பின்புறம் திருமலைநம்பி மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த, செம்புகுட்டி மற்றும் சுயம்பு ஆகியோர் பயங்கர ஆயுதங்களை கொண்டு, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த திருமலைநம்பி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended