காஞ்சிபுரத்தில் நாய் கடித்த ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் அவர் உயிரிழந்தார்

  • 6 years ago
காஞ்சிபுரத்தில் நாய் கடித்த ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் அவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரை ஒரு வருடத்திற்கு முன்பு நாய் கடித்தது. முறையான சிகிச்சை எடுக்காததால் நோய் முற்றி 100 சதவீதம் நாயின் குணத்தை அடைந்துள்ளார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவர்கள் சேகரின் நிலைமை கைமீறி போய்விட்டதாக தெரிவித்ததால் உறவினர்களின் உதவியுடன் சேகர் ராஜபாளையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற உடனே நோயின் தாக்கம் அதிகரித்ததால் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended