#BOOMINEWS | என் போன்ற ஏழைகளை அமைச்சராக அறிமுகம் செய்வதை தடுத்துவிட்டார்கள் எல்.முருகன் உருக்கம்..!

  • 3 years ago
என் போன்ற ஏழைகளை அமைச்சராக அறிமுகம் செய்வதை திமுக வினரும் காங்கிரஸாரும் திட்டமிட்டு தடுத்துவிட்டார்கள் - எல்.முருகன் உருக்கம்..!

கோவை : ஏழைகளை மத்திய அமைச்சராக மேலவையில் அறிமுகப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தடுத்துவிட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் மக்கள் ஆசிர்வாதம் யாத்திரையைத் தொடங்கி வைத்த பின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மத்திய இணை எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:., கடந்த ஜீலை மாதத்தில் பதவியேற்ற பிறகு இன்று மக்களை யாத்திரை மூலமாக மக்களை சந்திக்கிறேன். இந்த யாத்திரை முழுவதும் மக்களை சந்திப்பதுதான். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் யாத்திரை நடத்துகிறோம்.,
சுதந்திர வரலாற்றில் பட்டியில் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருப்பது இதுவே முதல்முறை., சமூக நீதியைக் போற்றுவதில் முக்கிய பங்காற்றுவது பாஜக தான். என் போன்ற ஏழைகள் மத்திய அமைச்சராவதை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால், நாடாளுமன்றத்தில் ஏழை அமைச்சர்களை அறிமுகம் செய்வதை திட்டமிட்டு தடுத்துவிட்டார்கள்., கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு மக்களைக் சந்திப்போம்., திமுகவின் 100 நாட்களில் சொன்ன பல அறிவுப்புகள், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை., மக்களின் நிலைப்பாடு பொறுத்து கொங்குநாடு விவகாரம் இருக்கும்., கூட்டணி குறித்து பாமக ராமதாஸ் பேசியது குறித்து அவரிடமே கேளுங்கள்., திமுக நல்லது செய்தால் ஆதரிப்போம். செய்ய முடியாத வாக்குறுதிகள் சொல்லி வாக்கு வாங்கிவிட்டு தற்போது நடைமுறை சிக்கல் ம என்று திமுக கூறிவருகிறது. பெட்ரோல் விலை குறைப்பு என்பதை திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்கள். மத்திய அரசு கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்கும். அனைத்து சாதியனரும் அர்சகர் ஆகுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல கோவில்களில் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Recommended