#BOOMINEWS | 4 விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை புரிந்த மாணவர் |

  • 3 years ago
நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை புரிந்த 12ம் வகுப்பு மாணவர் சாதனை செய்து அசத்தல்

மதுரை மாவட்டம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா - முத்துமாரி தம்பதிகளின் மகன்
ஷரீஸ்பாபு அப்பகுதியிலுள்ள தனபால்., மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார் 17 வயதான இந்த மாணவர் ஷரீஸ்பாபு., தற்போது இந்த மாணவர்., இரண்டு கைகள் மற்றும் நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர் 1 நிமிடத்தில் 85 தண்டால் எடுத்து உலக சின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக தமிழகத்தை சேர்ந்த மாணவன் ஷரிஸ்பாபு அந்த சாதனையை முறியடித்து. 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழ்நிலையில் சாதிக்க வேண்டும் என நினைத்து இன்று இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியுள்ளதாக பெருமை கொள்கிறார் இந்த மாணவன் ஷரீஸ்பாபு

Recommended